மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் மும்ப்ரா ரயில் நிலையத்தில் சிஎஸ்எம்டி நோக்கி சென்ற ரயிலில் ஏராளமானோர் பயணித்துள்ளனர். அப்போது மும்ப்ரா ரயில் நிலையம் அருகே, புறநகர் மின்சார ரயிலில் கடும் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தண்டவாளத்தில் தவறி விழுந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 முதல் 12 பயணிகள் காயமடைந்தனர். ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தவர்கள் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மும்பை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, மத்திய அரசை விமர்சித்து, இந்திய ரயில்வே "பாதுகாப்பின்மை, கூட்ட நெரிசல் மற்றும் ஒழுங்கின்மையின் சின்னமாக" மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது;
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!

"மோடி அரசாங்கம் 11 ஆண்டுகால 'சேவையை' கொண்டாடும் அதே வேளையில், மும்பையில் ரெயிலில் இருந்து விழுந்து பலர் உயிரிழந்ததாக வரும் துயரச் செய்திகள் நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு முதுகெலும்பாக உள்ள இந்திய ரெயில்வே, இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
மோடி அரசின் 11 ஆண்டுகால ஆட்சியில் பொறுப்புக்கூறல் இல்லை, மாற்றம் இல்லை, பிரசாரம் மட்டுமே உள்ளது. மோடி அரசு 2025 பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, இப்போது 2047 பற்றிய கனவுகளை விற்க ஆரம்பித்துவிட்டது.

இன்று நாடு எதை எதிர்கொள்கிறது என்பதை யார் பார்ப்பார்கள்? ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முகத்துல அழுக்கை வச்சுக்கிட்டு கண்ணாடியை கழுவாதீங்க.. ராகுல்காந்தியை வெளுத்த தேவேந்திர பட்னாவிஸ்..!