மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மையப்பகுதி வழியாகப் பாயும் நதி மிதி. இது மகாராஷ்டிராவில் 17.8 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு நதியாகும். விஹார் மற்றும் போவாய் ஏரிகளின் நிரம்பி வழியும் நீரிலிருந்து உருவாகும் இது, மும்பையில் அதிக மக்கள் வசிக்கக்கூடிய மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகள் வழியாகச் சென்று, பின்னர் மஹிம் க்ரீக்கில் அரேபிய கடலில் கலக்கிறது. இது ஒரு பருவகால நதி. மழைக்காலங்களில் மட்டும் உருவாகி மக்களுக்கு பலனளிக்கும்.

அதன் நீளம் குறைவாக இருந்தாலும், மிதி மும்பையின் வடிகால் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் நகரின் தெருக்களில் தங்கி விடாமல் ஓடி கடலுக்குள் கலப்பதற்கு மிதி நதி முக்கிய பங்காற்றி வருகிறது. இருப்பினும், பல ஆண்டுகளாக, மிதி நதி கடுமையான மாசுபாடு அடைந்து காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு மற்றும் தொழில்துறை கழிவுகளால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகள் அரங்கேறி உள்ளன.
இதையும் படிங்க: இவ்வளவு மோசமாகிட்டியே..! பாகிஸ்தான் ஜிடிபியை (GDP) ‘ஓவர்டேக்’ செய்யும் தமிழகம்..!
இந்த நிலையில் கடந்த ஜூலை 2005 இல் மும்பையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மிதி நதியில் இருந்த ஆக்கிரமிப்புகளால் சேதம் அதிகமானது. இந்த நிலையில் பேரழிவு வெள்ளத்திலிருந்து மிதி நதியை மீட்டெடுத்து சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டது. அப்போதிருந்து, பிருஹன் மும்பை நகராட்சி (BMC) மற்றும் மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் (MPCB) உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள், நீர் ஓட்டத்தை மேம்படுத்துவதையும் மாசு அளவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு மறுசீரமைப்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் தாமதங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மிதி நதியை தூய்மைபடுத்தும் பணி கேரளாவைச் சேர்ந்த மண் அள்ளுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி இயந்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான மேட்ப்ராப்பின் ஆலைக்கு வழங்கப்பட்டது.

இதில் ₹65 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. முறையாக டெண்டர் விடும் பணிகள் நடக்காமல் வேண்டியவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் மும்பையைச் சேர்ந்த வோடர் இந்தியா எல்எல்பியின் இயக்குநரான கேதன் கதம் மற்றும் விர்கோ ஸ்பெஷாலிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோஷி ஆகியோர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் இயந்திரங்களை அதிக விலைக்கு வாடகைக்கு எடுத்து ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. மொத்தமாக இந்த மோசடியில் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பியார் மே கபி கபி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகர் டினோ மோரியா மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் டினோ மோரியா, வோடர் இந்தியா எல்எல்பியின் இயக்குநரான கேதன் கதமுடன் அதிக அளவில் போனில் பேசி உள்ளார்.இதனால் அமலாகக்த்துறையின் பார்வை இவர் மீது திரும்பி உள்ளது.
இவரது ஹவுஸ்பல் 5 திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் டினோ மோரியா, அவரது சகோதரர் சாண்டினோ, பிஎம்சி உதவிப் பொறியாளர் பிரசாந்த் ராமுகாடே ஆகியோரின் வீடுகள் உட்பட 15 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு (EOW) பதிவு செய்த வழக்கைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக அரசுக்கு சம்மட்டி அடி.. அமலாக்கத்துறை அக்கப்போர்களுக்கு முடிவு.. குஷியான ஆர்.எஸ்.பாரதி..!