2025 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. ஐபிஎல் முதல் சீசன் கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை மொத்தம் 17 சீசன்கள் நடந்துள்ளன. இது 18 வது சீசனாகும்.

தற்போது வரை பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளன. இதனால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதேபோல் சினிமா நடிகர், நடிகைகள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் இருஅணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆர்சிபி டீசர்ட் அணிந்து பெங்களூர் அணிக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கமல் படத்தை அனுமதிக்காவிட்டால்.. தமிழகத்தில் கன்னடப் படம் வெளியிட முடியாது.. வேல்முருகன் எச்சரிக்கை.!

அதில், அனைவருக்கும் நமஸ்காரம். கடைசி 18 ஆண்டுகளாக நாம் இந்த பெரிய நாளுக்காக காத்திருந்தோம். 18 ஆண்டுகளுக்கான மனஉறுதி, பேஷன், அர்ப்பணிப்புடன் நாம் காத்திருந்தோம். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளது. இது நமக்கான நேரம். நமக்கான கோப்பை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

இது வெறும் ஜெர்சி அல்ல. பல லட்சம் மக்களின் கனவு. கர்நாடகா உங்களோடு இருக்கிறது. கோடிக்கணக்க மக்கள் இந்த கோப்பைக்காக காத்திருக்கிறோம். தைரியமாக விளையாடி கோப்பையை கொண்டு வாருங்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறேன். கர்நாடகாவின் பல கோடி மக்கள் உங்களுடன் இருக்கிறோம். என்ஜாய் செய்து விளையாடுங்கள். ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் பயமுறுத்தும் கொரோனா.. முகக் கவசம் அணிவது கட்டாயம்.? ஹெல்த் மினிஸ்டர் முக்கிய அப்டேட்.!!