ஊதிய உயர்வு, நிரந்தர பணி மற்றும் தூய்மை பணியினை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராடி வந்தனர். அவர்கள் அங்கிருந்து நீதிமன்ற உத்தரவுபடி அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. அதில் முக்கியமானது தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டம். அதன்படி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவு தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள், ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தபோது, கூடுதல் ஊதியம் வழங்காமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் விளம்பர நாடகம் நடத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.

மேலும், ஊதிய உயர்வு கேட்ட தூய்மைப் பணியாளர்களை அவமானப்படுத்தும் விதமாக, கோயம்புத்தூரில், குப்பை அள்ளும் வாகனத்தில், அவர்களுக்கான உணவு கொண்டு செல்லப்பட்டது என்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்றும், திமுக அரசு வழங்கும் இந்த உணவை உண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இந்த தரமற்ற உணவைக் கூட, அவர்களை வெகுநேரம் காத்திருக்க வைத்தே திமுக அரசு வழங்குவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு தரமில்லா உணவு..! இது தான் தாயுள்ளமா? அதிமுக கண்டனம்..!
முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்மனதில், அவர் கடையேழு வள்ளல்களில் ஒருவர் என்ற எண்ணத்தை யாரோ விதைத்துள்ளார்கள் போலும் என்றும் தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால், எதற்காக வெட்டி விளம்பரங்கள் உங்களுக்கு எனவும் சரமாரி கேள்விகளை முன்வைத்து உள்ளார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுடன் ஒரு பொங்கல்.. சுட சுட பிரியாணி பரிமாறி உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்..!!