ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய இடங்களில் ட்ரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் முயன்றது. அதை இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. எஸ்-400 அனைத்து ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு அமைப்பு தும்சம் செய்தது. இதனையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹாவல்பூர், பெஷாவர் உள்ளிட்ட 8 நகரங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது. இது தவிர, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள முசாபராபாத், கோட்லி மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. லாகூரில் உள்ள பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா அழித்தது. மூன்று படைகளும் சேர்ந்து பாகிஸ்தானை துவம்சம் செய்தது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை 10 ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. இந்திய ராணுவம், பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை கடல் தாக்குதலால் அழித்துவிட்டது. அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்த அழிவை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி துறைமுகம் உட்பட நகரின் பல பகுதிகளில் கடற்படையின் தாக்குதல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா இடையிலான போர் தீவிரமடையலாம் என்பதால் இந்தியாவில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடவும் உத்தரவு.

இதையும் படிங்க: கொண்டாட்டத்தை விட பாதுகாப்பே முக்கியம்..! அசாம் மக்களுக்கு மாநில முதல்வர் சொன்ன அறிவுரை..!
இந்நிலையில் டெல்லியின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட், ஜமா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பலத்த் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம் இது..! இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!