கடந்த 2022ம் அண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நிலவிய மோதல் குறித்து பேசினார். அப்போது இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிராக 'எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவாஸ்தவா புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. புகாரை லக்னோவிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியது. இதில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்துதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

வழக்கை இன்று நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பேசிய நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனிநபரையோ அல்லது இந்திய ராணுவத்தையோ அவதூறு செய்யும் உரிமையை இந்த பிரிவு வழங்காது. ராகுல் காந்தியின் கருத்துகள், இந்திய ராணுவத்தையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் இருந்ததாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. ராகுல் காந்தி வாதிடுகையில், புகார்தாரர் ராணுவ அதிகாரி அல்ல.
இதையும் படிங்க: டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார்... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு!!

அப்படி இருக்கையில் எப்படி என் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பிருந்தார். ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 199(1)-ன் கீழ், குற்றத்தால் பாதிக்கப்பட்ட நேரடி நபரைத் தவிர மற்றவர்களும் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. எனுவே இந்த வழக்கு விசாரிக்க தக்கதுதான். இந்த வழக்கில், BRO-வின் ஓய்வுபெற்ற இயக்குனர், தனது மன வேதனையை வெளிப்படுத்தி புகார் அளித்துள்ளார்.

எனவே அவர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர். சட்டப்படி புகார் அளிக்க முடியும். எனவே அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500-ன் கீழ் விசாரணை நடத்துவது சரியானது. ராகுல் காந்தி ஊடகவியலாளர்களிடம் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அவரது மன்னிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் தெளிவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!