மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன், உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும் குடும்பமும் தமிழ் மொழி தான் எனது குடும்பம் இங்கு இருக்கிறது., அதனால்தான் சிவராஜ் குமார் எங்கே இருக்கிறார்., அவரது கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது., அவரும் நம் குடும்பத்தில் ஒரு அங்கம் என பேசி இருந்தார்.
இதையும் படிங்க: #THUG LIFE- னா பொறுக்கினு அர்த்தம்... படத்தின் தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு!

இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது என்றும் எச்சரித்தனர். படம் வழியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த பிரச்சனை இன்னும் ஓயாமல் உள்ளது. எனவே, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கன்னட மொழி குறித்து கமல் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் எந்தவித இடையூறும் இல்லாமல் தக் லைப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் மேல தப்புனா நான் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்.. கமல்ஹாசன் திட்டவட்டம்..!