திருப்பதி: பக்தர்களின் பக்தி மற்றும் நம்பிக்கையை சீர்குலைத்த திருப்பதி லட்டு கலப்பட ஊழல் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட வழக்கில், சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு 223 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நெல்லூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர், பால் பண்ணை நிபுணர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லட்டு தயாரிப்பில் பாமாயில், எண்ணெய் போன்றவை கலக்கப்பட்டுள்ளன. மணல் தரத்திற்காகவும் நிறத்திற்காகவும் அசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம் உள்ளிட்ட செயற்கை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு தரமில்லா உணவு..! இது தான் தாயுள்ளமா? அதிமுக கண்டனம்..!
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் திருப்பதியில் உள்ள நிறுவனங்களில் இருந்து கடந்த 6 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டது. குறிப்பாக 2021 முதல் 2024 வரை ரூ.250 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கலப்பட நெய்க்கு தரச் சான்று வழங்கியதும் வெளியாகியுள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த பாரத் பாய் தாக்கூர் மூலம் ரூ.12.55 கோடி ரொக்கமும், சென்னையைச் சேர்ந்த மதரம் தேவாசி மூலம் ரூ.7.31 கோடியும் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பக்தர்கள் தங்கள் நம்பிக்கையை துரோகம் செய்யப்பட்டதாக கோபத்தில் உள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் மீதான நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த ஊழல் திருப்பதி லட்டு தயாரிப்பு முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கனடா விமானங்களுக்கு அமெரிக்காவில் 50% வரி..!! மிரட்டும் டிரம்ப்..!!