சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டம், எதிர்பாராத விதத்தில் பரபரப்பான சூழலுக்கு உள்ளானது. முன்னாள் முதலமைச்சர்களின் படங்களை மாட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தர்ணா போராட்டத்தின் மத்தியில், ஒரு சுயேச்சை கவுன்சிலர் நடிகை திரிஷாவின் படத்தையும் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டம் செயல் மேயர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பாலு மற்றும் பல அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு முன்பாகவே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்ப்பரேஷனுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் சரியாக நடைபெறவில்லை, கவுன்சிலர்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தச் சூழலில், தற்போதைய முதலமைச்சர் விஜய் படத்துடன் முன்னாள் முதலமைச்சர்கள் படங்களையும் மாட்ட வேண்டும் என்று இரு கட்சியினரும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இறுதியில் முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் மேடையில் இடம்பெற்றன.
இதையும் படிங்க: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிதீவிர மழை: திடீர் வெள்ளம், நிலச்சரிவு..!! 3 பேர் மாயம்..!!
இந்த நிலையில், 27-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்டோர் பல்வேறு பிரச்னைகளை எடுத்துக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக, 11-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மெய்யர், “திரிஷா படத்தை வைத்தே ஆக வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவர்தான்” என்று வலியுறுத்தினார். இந்தக் கோஷம் கூட்ட அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுயேச்சை உறுப்பினரின் இந்த எதிர்பாராத கோரிக்கை, கூட்டத்தை மேலும் சுவாரசியமாக்கியது.
இதையும் படிங்க: "ஆபரேஷன் டூஃபான்" விவகாரம்..!! தமிழ்நாட்டின் கவனத்திற்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்..!!