நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இசுலாமாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் திகழ்ந்து வருகின்றது என்று கூறினார். கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இசுலாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவரும்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருவதாகவும், மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்படுவதால்தான், அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!
இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது என்றும் எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் நமது அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்துள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
5 சிறப்பு கடந்த ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில், பல சிறப்பு அறிவிப்புகளையும், சென்னையில் ஹஜ் இல்லம், தொன்மையான பள்ளிவாசல்கள் தர்காக்கள் புனரமைப்பு, இசுலாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!