சென்னை பெரியார் திடலில் சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம், எழும்பூர் சட்டமன்ற தொகுதி பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளரும் சென்னை மண்டல பொறுப்பாளருமான ஆ.ராசா , இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திமுக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துறைமுகம், எழும்பூர் சட்டமன்ற தொகுதி சேர்ந்த பாக நிலை முகவர்கள், திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, தமிழகத்தை அறிஞர் அண்ணா தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் எப்படி பக்குவப்படுத்தி இருக்கிறார்கள் என்றால் ராமர் கோயிலுக்கும் போவோம், சிவன் கோயிலுக்கும் போவோம், முருகன் கோயில் போவோம்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

அது எல்லாம் ஒதுக்கி விட்டு ஜனநாயகம் என்று வந்தால் திராவிடத்துடன் தான் இருப்போம் என்கின்ற அளவிற்கு தமிழகத்தை உருவாக்கியுள்ளனர். மேஜைக்கு கீழ் தவழ்ந்து வந்து ஆட்சி பிடித்தவர் அல்ல நம்முடைய தமிழக முதலமைச்சர். ஆட்சியிலும், கட்சியிலும் படிப்படியாக பரிமாணம் மேற்கொண்டு, இந்த இரண்டிலும் முதுமை பெற்று இன்று திமுக கட்சியுடைய தலைவராக ஆட்சியுடைய முதல்வராக இருக்கிறார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் இந்தியாவுடைய அரசியல் சட்டத்தை இந்தியாவுடைய இறையாண்மை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய மகத்தான தேர்தல் என்பதை மனத்தில் வைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!