தமிழக வெற்றிக் கழகம் கட்சி வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் வக்பு சொத்துக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்கிற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்-யின் வழிகாட்டுதலின்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனியர் கவுன்சில் அபிஷேக் மனு சிங்வி பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொண்ட குழுவுடன் முதல் விவாதத்தின் போது தரமான ஒரு பதிவை செய்தார். சமீபத்தில் எங்களின் தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தபோது சிஏஏ சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று தனது எதிர்ப்பை மக்கள் முன்பு எந்த அளவுக்கு உறுதியாக இருந்தது. அதேபோன்று இன்று வக்பு சட்டத்திற்கு எதிராக இருக்கிறதா? என கேள்வி எழுப்பியது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருக்கும் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது ஒரு கண் துடைப்பாக உள்ளது. வக்பு சட்டம் தொடர்பாக மாநில அரசு இயற்றிய தீர்மானம் செல்லுபடி ஆகாது. வக்பு சட்டத்திற்கு எதிராக இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பஞ்சாப் விவசாயிகள் எப்படி போராட்டத்தின் மூலம் விவசாய சட்டத்தை திரும்பப்பெற வைத்தார்களோ அதே போல் போராட்டம் நடத்தி திரும்பப் பெறலாம். அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இன்று வரை உறுதியுடன் போராடி வருகிறது.
இதையும் படிங்க: பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கூறி வரும் திமுக அரசு ஏன் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை? இதுதான் இஸ்லாமிய மக்களின் பெரிய கேள்வி. கேரளா அரசு எப்படி இந்த வழக்கில் இணைத்துக் கொண்டதோ அதேபோல் தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலமைப்பில் சிறந்து விளங்கக்கூடிய வழக்கறிஞர்களை நியமித்து இஸ்லாமிய மக்களை பாதுகாக்கவும் அரசியலமைப்பின் அடிப்படையில் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக தன்னை நினைத்துக் கொண்டு உண்மையாக நேர்மையாக சிஏஏ சட்டத்திற்கு எப்படி எதிராக குரல் கொடுத்தார்களோ அதே போன்று நேர்மையை திமுகவும் தமிழக அரசும் மற்றும் அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த போராட்டத்தில் பங்கேற்க திமுக அரசுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இது சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்ளனர். மக்கள் பிரச்சனைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் இஸ்லாமியர்கள் பின்தங்கியுள்ளனர். இந்திய சராசரியை விட இஸ்லாமியர்களின் கல்வித் தகுதி குறைவாகவே உள்ளது. அரசியல் எதிரி திமுக-வுடனும், கொள்கை எதிரி பாஜக-வுடனும் கூட்டணி இல்லை. பாஜக உடன் இருப்பதால் அதிமுக-வுடனும் தவெக கூட்டணி அமைக்காது. விஜய்யின் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் நாங்கள் தெரிவிக்கிறோம். எதிர்கட்சியான அதிமுகவை நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, பல தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? தவெகவின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதே எங்களின் நிலைபாடு என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?