100 நாள் வேலை திட்டத்திற்கு காந்தி பெயரை வச்சால் என்ன? ராமன் பெயரை வச்சால் எங்களுக்கு என்ன? திட்டம் இருந்தால் போதும் விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேச்சு - தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி அமையும் எனவும் சி.வி.சண்முகம் பேச்சு
விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர் கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசண்முகம் பேசியதாவது, என்னை மாதிரி பதவி வெறிப்பிடித்த தலைவர்கள் கட்சியை விட்டு போவார்கள். ஆனால் தொண்டர்கள் அதிமுகவை விட்டு போகமாட்டார்கள். அதிமுகவில் யார்க்கும் நிரந்தரம் இல்லை, யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கு வரலாம் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றவர்,அதிமுக வேட்பாளர் யார் என்றால் இரட்டை இலை என்று தான் பார்க்க வேண்டும் என்றார். தரவுகள் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது , ஒவ்வொரு வாக்கு சாவடியில் உள்ளவர்களும் தரவுகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: “நேற்று கமல்... இன்னைக்கு விஜய்... நாளைக்கு சிம்பு... எந்த கொம்பன் வந்தாலும்...” - படு ஓபனாக சவால் விட்ட சி.வி.சண்முகம்...!
திமுககாரர் வீட்டில் போய் ஓட்டு கேட்காதீங்க. அவங்க எப்படி நமக்கு போடுவாங்க அவங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க என்றவர். அவர்களிடம் போடுவாங்க என்று நினைப்பது நம்மளை நாம் ஏமாற்றிக்கொள்ளும் செயல் என்றவர்.
இடைத்தேர்தலில் ஒருவாக்குச்சாவடி என்றால் 98 சதவீதம் நமக்கு தான் 2 சதவீதம் தான் மற்றவர்க்கு என்று நம்ம ஆள் கணக்கு எழுதி கொடுப்பார்கள் ஆனால் வாக்கு எண்ணும் பொழுது தான் யார் யார் எத்தனை வாக்கு என்று அதுபோதுன்று கணக்கு எல்லாம் தற்போது சரிவராது களத்தில் நின்று தரவுகளை திரட்ட வேண்டும் என்றார்
மேலும் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை எடுத்துவிட்டார்கள் என்று திமுக போராடுறாங்க. காந்தி பெயரை வச்சால் என்ன ராமன் பெயரை வச்சால் எங்களுக்கு என்ன என்று கூறியவர் திட்டம் இருந்தால் போதும் என சி.வி.சண்முகம் பேசினார்
இதையும் படிங்க: "பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!" பெ. சண்முகம் கடும் சாடல்!