தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 10 விவகாரம் இப்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ஒரு நாளைக்கு ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டிலுக்கு 10 கோடி வசூல் செய்வதும் மாதத்திற்கு 300 கோடி ரூபாய் வசூல் செய்வதும் நாம் அது குறித்து மிகப்பெரிய எதிர்ப்பு மக்கள் தெரியப்படுத்துகிற போதும் போராட்டம் நடத்துகிற போதும் அது குறித்து கடந்த காலங்களில் முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது .ஆனால் இன்னும் இந்த பிரச்சனை முடிந்து பாடில்லை என்பதுதான் நிதர்சனமான நிலவரமாக இருக்கிறது.
இன்னும் கலவரம் ஓய்ந்தபாடில்லை வாடிக்கையாளர்களுக்கும் கடைக்கார்களுக்கும் வாக்குவாதம், கைகலப்பு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு முன்பாக நடைபெற்று வருவது தவிர்க்க முடியாதது. நேற்று முன்தினம் கூட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கடையிலே விற்பனையாளரை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருப்பதை முதல்வர் விஜய் அண்ணா பார்த்திருப்பார்கள் .
இதுபோன்ற தாக்குதல் தொடர்பாக தொடருமா என்பது தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருந்தாலும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது கரூரில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த விஜய் அண்ணா பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டிற்கு பத்து ரூபாய் என்று பாட்டு பாடி நம்மையெல்லாம் ஒரு அசத்து அசத்தினார்கள்.
இதையும் படிங்க: இனி 45 நிமிடங்கள் ஓய்வு... பள்ளி மாணவர்களுக்கு மெகா குட்நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!
தமிழ்நாட்டிலே 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது அதனுடைய முழு செயல்பாடு என்ன மூடப்பட்டதா? மூடியது திறக்கப்பட்டதா திறந்தது மூடியே இருக்குமா மூடியது திறக்குமா? என்பதெல்லாம் ஒரு மிகப்பெரிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையிலே சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த கடைகள் மூடியதால் 11,000 கோடி அரசுக்கு வந்த இழப்பு என்று அவர் எந்த அடிப்படையிலே அர்த்தத்தில் அதை சொல்லினார் என்று தெரியவில்லை .
டாஸ்மாக் மதுபான கடைகளிலே தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்ற அல்ட்ரா சிட்டிக்கு விஜய் அண்ணா தடை போடுவாரா?. பாட்டிலுக்கு பாட்டிலுக்கு பத்து ரூபா என்று கரூரிலிருந்து பாடிய பாட்டை அவர் மறந்திருந்தாலும் இன்றைக்கு தமிழகம் முழுவதும் நடைபெறுகிற அட்ராசிட்டியை பார்த்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று தமிழக மக்கள் பாடுவதை விஜய் அண்ணா காதில் கேட்கிறதா
ஒட்டுமொத்த பிரச்சனைக்கும், பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு சீரழிவு ,தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இத்தனையும் ஏற்படுவது இந்த போதைப் பொருள் நடமாட்டத்தால் என்பது விஜய் அண்ணா உறுதி செய்து இருக்கிறார்கள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
ஏன் முதல்வராக பொறுப்பேற்ற விஜய் அண்ணா முதல் மூன்று கையெழுத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு கையெழுத்துட்டார் அதில் தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழித்து பாதுகாப்பான தமிழக தலை நிமிர்ந்து தாய்த்தமிழ் நாட்டை உருவாக்குவோம் என்று விஜய் அண்ணா கூறியது இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது அது என்ன ஆனது
நிதி ஆயோ கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கோரிக்கை முன்வைத்தார் விஜய் அண்ணா அது சம்பிரதாயமான கோரிக்கையா? சாதனை படைக்கும் கோரிக்கையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஆகவே பாட்டிலுக்கு 10 பாடல் என்று விஜய் அண்ணா பாடினீர்கள் தற்போது தங்கள் ஆட்சியை நடைபெறுகிற இந்த அட்ராசிட்டிக்கு முடிவு கட்ட தமிழ்நாட்டு மக்களும் இதைபாடி கொண்டு இருக்கிறார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?