விஜயைப் பார்த்து வியந்து போய் இருக்கிறார் மோடி என விஜய்க்கு புகழ் மாலை சூட்டுவதில் த.வே.க கட்சியில் போட்டா போட்டி ஜெயிக்கப் போவது யார்? - முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி
ஒரு நாட்டிலிருந்து அமைதியான சூழல் இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் அந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதுதான் ஆட்சியாளர்களிடம் முதன்மை கடமை என்பதை எல்லோரும் அறிவார்கள் .
ஏன் நம்ம முதல்வர் விஜய் நன்றாக அறிந்த காரணத்தால் தான் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது சட்டம் ஒழுங்கு குறித்து சுற்றம் சுமத்தி தனக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து இப்போது ஆட்சி அதிகாரத்தை முதலமைச்சர் அரியணையை கைப்பற்றியிருக்கிறார்கள் விஜய்.
இதையும் படிங்க: கூட்டணி அமைந்தும் தீராத குழப்பம்! செம கடுப்பில் முதல்வர் விஜய்! தவெகவில் புது பிரச்னை!
தமிழகத்தில் தற்போது 8 கோடி பேர்கள் வசிக்கின்றார்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்டு ஆனால் மொத்த காவல்துறை எண்ணிக்கை 1.50 லட்சம் இருக்கிறது. இதிலேயே 90 ஆயிரம் பேர்கள் தான் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பிரிவில் தங்கள் கடமையை பணியை செய்து வருகின்றார்கள். மீதமுள்ள 60,000 பேர்கள் காவல்துறையின் மற்ற 35 சிறப்பு பிரிவுகளின் பணி செய்கின்றார்கள் இது காவல்துறை வட்டாரங்கள் கவலையோடு தெரிவிக்கின்ற செய்தி. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தலைவிரித்து ஆடுகிற இந்த கள நிலவரம் ஒருபுறம் இருந்தாலும் த.வே.க அரசியல் நிலவரமும் இப்போது கலவரம் ஆக இருக்கிறது .
முதல்வர் விஜய்யை புகழ் பாடுவதிலே த.வ.க கட்சிக்குள்ளே போட்டோ போட்டி, நடக்கிறது. சமீபத்திலே த.வெ.க கட்சிக்கு தாவிய அடுத்த கட்சிக்காரர்கள் இடத்திலே அதைவிட போட்டா போட்டி நடைபெறுகிறது .இது ஒரு புறத்திலே என்றால் தோழமைக் கட்சிகள் உள்ளவர்கள் விஜய்யை யார் உயர்த்தி பிடிப்பது என்று ஒரு கடுமையான போட்டா போட்டி இப்போது தோழமைக் கட்சிகளுக்கு உள்ளே நடந்து வருகிறது.
அதிலே அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சொல்லி உள்ளார் அதில் விஜய் பார்த்து வியந்து போய் இருக்கிறார் பாரத பிரதமர் மோடி அவர்கள். ஏனென்றால் கூட விஜய் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று சொன்னாலும் சொல்லுவாங்க. விஜய்யின் புகழை பார்த்து மோடியே உயர்ந்து போய் இருக்கிறார் என புகழ் பாடி த.வெ.க விலே முதன்மை இடத்திற்கு வர வேண்டும் என்று முந்திக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன்
அதைவிட சமூக நீதிக்காக போராடி இந்த தாய் தமிழ்நாட்டில் உரிமைக்காக தங்களை தியாகம் செய்த தந்தை பெரியார் ,பேறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா இன்னும் பல தலைவர்கள் எல்லாம் நம்ம முதல்வர் விஜய்யின் வடிவில் பார்க்கிறோம் என்று செங்கோட்டையின் பின்னால் வந்த அதிமுகவின் அடிப்பொடிகள் புகழ் பாடுவதை பார்த்து விஜய் மன்ற நிர்வாகிகளே அசந்து போய் இருக்கிறார்
இதோடு மட்டும் விற்கவில்லை விஜய் தான் தமிழ்நாட்டின் நிரந்தரம் என்று கூட்டணி கட்சிகள் புகழ்பாடு பார்த்து தமிழ்நாடு அசந்து போய் உள்ளது
மேலும் விஜய்க்கு எதிரிகளிடம் வரும் கணைகளுக்கு கவசமாக இருப்போம்
என்று விசுவாசத்திற்கு புதிய விலாசம் வந்துள்ளார் வைகோ அவர்கள்
தமிழ்நாட்டு மக்களே இதனை உன்னிப்பாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நம்ம முதல்வர் விஜயைய் யார் யார் இன்றைக்கு புகழ் பாடுகிறார்களோ கூட்டணிக்கு முன்பு வரை யார் யார் எப்படி பேசினார்கள் நமது விஜய்யை அவர்களை வார்த்தைகளால் எப்படி வறுத்து எடுத்தார்கள் அவர்கள் தான் இன்றைக்கு முதலமைச்சர்கள் விஜய் அமர்ந்தவுடன் த.வெ.க கட்சிக்கரை விட சமீபத்திலே த.வெ.க கட்சிக்கு அடுத்த கட்சிக்காரர்களை விட கூட்டணி கட்சிக்காரர்களும் அடிக்கிற ஜால்ராவால் தவிஜய்க்கு ஜன்னி
காய்ச்சல் வந்து விட்டது என்று செய்திகள் வருகிறது இதைப் பார்த்து விஜய் சொக்கி போய் உள்ளார்
கடந்த 50 நாட்களாக அரசு நிர்வாகம் தங்கி தடுமாறி நிற்கிறது ஆனால் தீர்வுகளை காண வேண்டிய நம்ம முதல்வருக்கு நேரம் போகவில்லை அவருக்குத்தான் அதிமுகவின் ஆயுளை முடிக்க வேண்டிய தலையாக கடமையாக உள்ளார் பிரச்சனையை தீர்ப்பதற்கு எங்கே நேரம் உள்ளது
அதிமுகவிலே அதிகாரத்தை அனுபவித்த இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கட்சியை காப்பாற்ற வேண்டிய நேரத்திலே கட்சியை காட்டி கொடுத்து விட்டு செல்வது அதிமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்திலும் எடப்பாடியார் காலத்திலும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது
இதுபோன்று கட்சி விட்டு போகிறார்கள் கண்றாவி காட்சியை பார்த்து சலித்து போய் வேதனையிலே கண்ணீரை காணிக்கையாக்கி முன்பு விட வேகமாக விசுவாசத்தோடும் கழகத்திற்கு உழைத்து அண்ணா திமுக ஆட்சி கட்டிலில் அமர்த்திக்க வரலாறு முதல்வர் விஜய்க்கு தெரியாது
மொத்தத்தில் ஒரு விஜய் அல்ல 100 விஜய் அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழ்நாட்டு மக்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டனும், அண்ணா திமுகவை ஒருநாளும் கைவிட மாட்டார்கள் அதிமுகவை அழிக்க இந்த பூமியில் எவனும் பிறக்கவில்லை இனியும் பிறக்க போகவில்லை இதுதான் அதிமுகவின் ஆசை வரலாறு.
அதிகாரத்தை தேடி ஓடுகிற ஒரு சில போலிகளை நம்பி அதிமுக ஒரு நாளும் இருந்ததில்லை.! வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஏன் செத்தாலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று கோடான கோடி தொண்டர்கள் இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காப்பாற்றுவதற்காக எட்டு கோடி தமிழர்களும் இருக்கின்ற வகையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்து வேட்டையாடி வருகிற விஜய்க்கு இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் கவசமாக இருக்கிற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கழக தொண்டர்கள் மீட்டெடுத்து தருவார்கள் இந்த இடைத்தேர்தலில் தீர்ப்பாக வெளிவரும் என கூறினார்
இதையும் படிங்க: என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!