இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். இந்த விழாவில் கமல்ஹாசன் பேசிகையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கன்னடம் தமிழில் இருந்து பிறக்கவில்லை. அது தனித்து இயங்க கூடியது என்று கன்னட அமைப்பினர், கர்நாடகா அரசியல்வாதிகள் கூறினர். மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கோரவில்லை. இதனால் தக்லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெரிவித்தது.
இதையும் படிங்க: கமல் படத்தை அனுமதிக்காவிட்டால்.. தமிழகத்தில் கன்னடப் படம் வெளியிட முடியாது.. வேல்முருகன் எச்சரிக்கை.!

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனால் வரும் 5ம் தேதி கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பேசிய அவர், நமது தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள். அன்பு மன்னிப்பு கேட்காது என்று கூறிவிட்டு, நீண்ட விளக்கத்தை கமல்ஹாசன் கூறுகிறார். அதற்கு பதில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமலை எம்.பி.யாக ஆக்க வேண்டாம்.. திமுகவுக்கு திடீர் கோரிக்கை வைத்த தமிழக அரசியல் கட்சி.!!