தமிழ்நாட்டில் குட்கா புழங்குவது பற்றி திமுக, அதிமுக மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது. அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக திமுக குற்றம்சாட்டியது. 2017ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு எடுத்துச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக குற்றம் சாட்டினார். அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் டன் கணக்கிலான குட்கா மற்றும் பான் மசாலாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அதிமுக பகிரங்க குற்றச்சாட்டாக முன்வைத்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் மது விலக்கு மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டி பாமகவும் நீண்ட காலமாக போராடி வருகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு அருகிலேயே பெட்டி கடைகள் பான் மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவது மற்றும் அதிரடி ரெய்டுகளில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் சிக்குவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸும், அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வந்தனர். இது திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி, அன்புமணி ராமதாஸிடமே நேரடியாக டீல் பேசும் அளவிற்கு சென்றுள்ளதாக பகீர் கிளப்பியுள்ளார்.

வேலூர் மாவட்ட பாமக பொதுக் குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு லஞ்சம் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் பகல் நேரத்தில் கூட பெண்கள் நிம்மதியாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை எனக்கூறினார். குட்கா, புகையிலை உள்ளிட்டவை குறித்து நான் பேசாமல் இருக்க எனக்கு பல கோடி ரூபாய் தர முன் வந்தனர். இது போன்ற பல லாபிகளை பார்த்துள்ளேன். வாங்கனுன்னா இந்த 1000 கோடி மட்டும் இல்லை, எவ்வளவோ ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருக்கலாம். புகையிலை லாபிக்கு ரூ 5000 கோடி தருவதாக சொன்னார்கள். எங்கு எப்படி வேண்டும் என சொல்லுமாறு கேட்டார்கள். நான் நினைத்திருந்தால் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு எப்படியோ இருந்திருப்பேன்.

இதையும் படிங்க: சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!
ஆனால் எனக்கு அது முக்கியமில்லை எனக்கு பாட்டாளி கட்சி பேர் முக்கியம். இந்தியாவில் உள்ள இளைஞர்களுடைய நலன் முக்கியம். நான் மன உறுதியோடு இருந்தேன். பணம் வேண்டுமானால் எப்படியும் சம்பாதிக்கலாம். நமது கட்சியின் நற்பெயர்தான் முக்கியம் என நினைத்தேன் எனக்கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் வர உள்ள சமயத்தில் திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டுக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!