தான் என்ன தவறு செய்தேன் என அன்புமணி கேட்டு தன்னை குற்றவாளியாக ஆக்க விரும்புவதாகவும் தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆள தொடங்கியது அன்புமணி தான் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் என ராமதாஸ் கூறி இருந்தார்.

இந்த நிலையில், நாளை காலை முதல் பாமக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை பாமக தலைவர் அன்புமணி சந்திக்கிறார். ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் கட்சிப் பணிகளில் அன்புமணி தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு முன்பே பாலம் சேதம்.. ஊழல் குறித்து விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்..!

வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களுக்கு பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க உள்ள நிலையில் மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பாமக கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார் முகுந்தன்..! அன்புமணி எங்கள் எதிர்காலம் என உருக்கம்..!