பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சகட்ட எட்டியுள்ளது. கட்சியில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுவோரை பாமக நிறுவனர் ராமதாஸ் பொறுப்புகளை பறித்து வருகிறார். அதற்கு பதிலடியாக யார் மாற்றப்பட்டாலும் மாற்றப்படுவதாககடிதம் வந்தாலும் உடனே அவர்கள் மீண்டும் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள் என அன்புமணி அறிவித்துள்ளார். கட்சியின் நிறுவனரான எனக்கு தான் கூட்டணியை முடிவு செய்வது முதல் நியமனம் வரை அதிகாரம் உள்ளது என ராமதாஸும், கட்சியின் தலைவரான எனது கையெழுத்தே இறுதியானது என அன்புமணியும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து இன்று கூட ராமதாஸ் கடலூர் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் சிலரை புதிதாக நியமித்துள்ளார். இதையடுத்து இன்று கரூர் மாவட்ட செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் என்பவர் நீக்கி பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் கடலூரில் கை வைத்த ராமதாஸ்.. அன்புமணிக்கு விழுந்த அடுத்த அடி..!

கரூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் என்பவர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அறிக்கை வெளியான பிறகு தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்த பாஸ்கரன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாசிடம் தெரிவித்ததாகவும் அதற்கு நான் மாவட்ட செயலாளராக போட்டுள்ளதால் நீங்களே அந்த பதவியில் நீடிப்பதாக ராமதாஸ் தெரிவித்ததாகவும், தன்னை நீக்கும் அதிகாரம் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளதாக பாஸ்கரன் தெரிவித்தார்.

மேலும் கட்சியில் பல்வேறு பதவிகள் வகித்த தன்னை எந்த பொறுப்பிலிருந்து நீக்கினாலும் ராமதாசுக்காக பணி செய்வேன் என கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். பாமகவில் அன்புமணிக்கும் ராமாதாஸிற்குமான நிர்வாகிகள் நீக்குவதில் சேர்ப்பதில் மோதல் போக்கானது நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: 35 புதிய கல்லூரிகள்; பேராசிரியரை நியமிக்காத திமுக அரசு... கழுவி ஊற்றிய அன்புமணி!!