படையப்பா படம் நகைச்சுவையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த நிலையில், கோவில் பட நாச்சியப்பன் கடை காமெடியை மேற்கோள் காட்டி முதல்வருக்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட மாநில அரசு தான் கூடுதலாக நிதி ஒதுக்கி வருகிறது. மாநில அரசுதான் படி அளந்து வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்ற காமெடியை சொல்லி திருச்சியில் பேசினார். மேலும் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ரூ.5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #DON'T WORRY.. 2026 நம்ம கையில! திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என அண்ணாமலை கிண்டல் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாவம் தமிழர்கள்... இப்படி செய்யாதீங்க! ரேகா குப்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!