தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. மறைந்த முன்னோடிகளுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அதனை முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ளார்.
அரசியலே மக்களுக்கானது என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் தனது தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்து பேசினார். கொள்கை மற்றும் நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கலாம் என்றும் ஆனால் மக்கள் பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சியையும் மக்கள் பக்கம் நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜயின் தனி தீர்மானத்திற்கு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசின் தனி தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் முதல்வர் விஜய் பதிலுரையாற்றினார். அரசின் தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார். புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரின் கோரிக்கை தீர்மானத்தில் இணைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "மேகதாது வேண்டாம்".! CM விஜய் கொண்டு வந்த தீர்மானம்... முழு ஆதரவுடன் கைகோர்த்த எடப்பாடி பழனிச்சாமி"..!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கோரிக்கையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியதை அடுத்து இணைக்கப்பட்டிருக்கிறது. தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். தனி தீர்மானத்தை மறுப்போர் இல்லை என்ற நிலையில் கர்நாடகா அரசு எதிரான தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் முன்மொழிந்தார்.
இதையும் படிங்க: தமிழகம் VS கர்நாடகா…! முதல்வர் விஜயின் மேகதாது எதிர்ப்பு தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரல்..!!