சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி உள்ளார். அப்போது, திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்ற போது அரசியல் தலையிட்டால் எஃப் ஐ ஆர் பதிவதில் காலதாமதம் நடந்தது அனைவருக்கும் தெரியும் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார்.
துபாயில் ரத்தீஷ் ஒளிந்திருப்பதாகவும் ரத்தீஷ் யாருக்கு நெருக்கமானவர் என்றும் கேட்டார் முதல்வர் விஜய். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த முதல்வர் விஜய் ஊழல் என்று சொன்னதும் எல்லோரும் எழுந்து விடுவார்கள் என்று கூறினார். ஆளுங்கட்சிகனர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம் நடந்ததாகவும் திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் 2022-ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கடலூர் எம்பி ரமேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் இறந்ததாகவும் அதனை தற்கொலை என சித்தரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: PARTY FUND நேரடி பயனாளி ஸ்டாலின், உதய்..!! ஆதாரத்தை அள்ளி வீசிய CM விஜய்..!
ஆம்ஸ்ட்ராங் கொலை தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் திமுகவினர் என்ற காரணத்தால் கடந்த ஆட்சி காலத்தில் தாமதமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். கட்சி பாகுபாடு இல்லாமல் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் ஆளு கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் சட்டப்பேரவையும் முதல்வர் விஜய் உறுதி செய்தார்.
இதையும் படிங்க: வீராணம் திட்டம் முதல் முரசொலி வரை..! EMI- ல் லஞ்சம்... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!!