பாகமவில் அப்பா, மகன் இடையிலான உரசல் உச்சக்கட்டத்தை எட்டி வந்த நிலையில், இருவரும் சந்தித்து பேசினால் சுமூக முடிவு எட்டக்கூடும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் சிக்கலாக மாறியது. பொதுவெளியில் பாமக விவகாரம் குறித்து பாஜக, அதிமுக நிர்வாகிகள் பேசவில்லை என்றாலும், தனித்தனியே அன்புமணி, ராமதாஸ் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ராமதாஸ் அன்புமணியிடையே சுமூக உறவு ஏற்பட வேண்டும் என்பதே பாமகவினுடைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடைய விருப்பமா இருக்கக்கூடிய சூழ்நிலையில், இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் பாமாகவினுடைய தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தை இன்றைய தினமே சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அன்புமணி சந்திப்பை தொடர்ந்து அரசியல் விமர்சகரான ஆடிட்டர் குருமூர்த்தியும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியும் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துள்ளனர்.

ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அன்புமணி உடன் ராமதாஸ் ஒரு மணி நேரம் பேசிய நிலையில், குருமூர்த்தி, சைதை துரைசாமி இருவரும் ராமதாஸை சந்தித்துள்ளனர். ஏனெனில் ராமதாஸ் கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, மக்களவை தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி, செளமியா அன்புமணி வற்புறுத்தியதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இது பாஜகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. ஒருவேளை இந்த பிரச்சனை பெரிதாகும் பட்சத்தில் வன்னியர்களுடைய வாக்கு வங்கி தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக தலைமை யோசிக்கிறதாம்.

இதையும் படிங்க: அடுத்தது தமிழகத்தில் நம் ஆட்சி தான் நடக்க வேண்டும்.. ஒரே போடு போட்ட அன்புமணி ராமதாஸ்..!
அன்புமணி கட்சியின் எதிர்காலம் எனக்கூறப்பட்டாலும் கட்சியின் பைலா படி நிறுவனர் ராமதாஸுக்கே கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிகளை எடுக்க அதிகாரம் உள்ளது. வன்னியர்களின் வாக்குகளைப் பெற ராமதாஸின் ஆதரவு மிக முக்கியம் என்பதாலும், அப்பா, மகன் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்வது தேர்தல் நேரத்தில் நல்லது அல்ல என்பதாலும் இதுவரை மெளனம் காத்த பாஜக, அதிமுக இரண்டு கட்சிகளும் தற்போது களமிறங்கியுள்ளன.

பாஜக சார்பில் அரசியல் விமர்சகர் குரு மூர்த்தியும், சைதை துரைசாமியும் தைலாபுரம் தோட்டத்திற்கு நேரில் சென்று ராமதாஸிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அன்புமணி மீது தனக்கு உள்ள மன வருத்தம் மற்றும் பிரச்சனைகளை ராமதாஸ் இருவரிடமும் பகிர்ந்து கொண்டதாகவும், அடுத்ததாக இருவரும் அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்னை யாரும் இயக்கல.. பாமகவில் இதுதான் நடக்கிறது..! உண்மையை போட்டுடைத்த ராமதாஸ்..!