ஆண்டுதோறும் மார்ச் 7ஆம் தேதி மக்கள் மருந்தகம் நாளாக கொண்டாட பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதையடுத்து, இன்று தமிழகத்தில் மக்கள் மருந்தகம் நாள் கொண்டாடப்பட்டது, இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் தனியார் ஹோட்டலில் மக்கள் மருந்தகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மக்கள் மருந்தகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு முதலமைச்சர் சித்தராமையா மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை தயாரிக்க சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதாகவும், தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதியான அடுத்த நாள் இந்த அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாகவும், இதை பார்க்கும் போது மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து இருப்பதாக தெரிகிறது என்றும், காங்கிரஸ் திமுக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அடுத்த நாள் கர்நாடக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தராமையா மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை தயாரிக்க அறிவித்த நேரம் தவறு, அறிவித்த முறை தவறு, அறிவித்ததே தவறு.
டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கும் வகையில் மேகதாது அணை கட்டினால் பாதிப்பு ஏற்படும் என்றும், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமாக இருப்பதாகவும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வேண்டுமென்றே காங்கிரஸ் தனது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதி விவசாயி நலனை அடமானம் வைத்து விட்டாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: திமுக "குண்டர்கள்" அட்டூழியம்... ஒரே நேரத்தில் 2 உயிரை காவு வாங்கிய உ. பி. க்கள்... நயினார் கொந்தளிப்பு..!!
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், கண்டன குரல் கொடுக்காத அளவுக்கு இருக்கும் தமிழக முதலமைச்சர் எப்படி தமிழக நலனை காப்பாற்றுவார் என்று கேள்வி எழுப்பினார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்தார்கள், ஆனால் திமுக ஆட்சி ஐந்தாண்டுகள் முடியும் நிலையில் எத்தனை பேருக்கு அரசு வேலை கொடுத்தார்கள் என்றும், அரசு தேர்வாணையம் மூலம் 40 ஆயிரத்துக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும், எனவே மக்களைத் தொடர்ந்து முட்டாள் ஆக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவுக்கு மானியம் கிடையாது, மத்திய அரசு மீது குறை சொல்வது, தம்பட்டம் அடிப்பது, நாளிதழில் விளம்பரம் தருவது போன்ற வேலைகள் மட்டுமே முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து வருவதாகவும், போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளித்த சிலிண்டர் மானியத்தை தற்போது வழங்க வேண்டும் என்று அண்ணாமலை செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சங்கீதாவுக்கு நடப்பது கொடுமை... நியாயம் கிடைக்கணும்..!! தமிழிசை ஆதரவு குரல்..!!