மத்திய அரசு கொடுக்கும் நிதிகளையே தமிழக அரசு பயன்படுத்தி அதை தான் செய்ததாக தமிழக முதல்வர் தெரிவித்து வருகிறார் என திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

திமுகவினர் தொடர்ந்து தமிழர்களை வைத்தும் தமிழர் பண்பாடை வைத்தும் அரசியல் செய்து வருகின்றனர். கீழடியை பொறுத்தவரை ஏற்கனவே சான்றுகள் அளிக்கப்பட்டுள்ளது.கூடுதல் சான்றுகள் தேவை என கூறப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் சரஸ்வதி என்ற ஒரு நதியே இல்லை என சர்ச்சை கூறி கூறி வருகிறார். தமிழக முதல்வர் எப்போதுமே தமிழுக்கு எதிரான கருத்தை கூறி, தமிழுக்கு தொண்டு செய்வது போல் நடித்து ஆட்சியைப் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வருகின்ற தேர்தலில் இது எடுபடாது.
இதையும் படிங்க: நயினார் தலைமையில் வாகனப் பேரணி... போலீசுக்கே தண்ணி காட்டிய பாஜகவினர்!

அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும். கூட்டணியை கண்டு அறநிலையத்துறை அமைச்சருக்கு தான் பயம். அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எங்களுடன் சேர்ந்து விடுவார்களோ என்ற பயம் அவருக்கு உள்ளது.

டாஸ்மார்க் நிர்வாகம் ஒரு கம்பெனி அந்த கம்பெனியில் நடக்கக்கூடிய ஊழல் எதுவாக இருந்தாலும் அதில் தலையிட அமலாக்க துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் நண்பர் ரத்தீஷ் 300 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியுள்ளார். தற்பொழுது அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்த உதயநிதியின் நண்பர்கள் தலைமறைவாகி உள்ள நிலையில் தற்போது திமுக அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. புதுப்புது விளம்பரம் போதுமா.. கல்வித்துறை நாசமா போச்சு..! நயினார் பளிச்..!