2024ம் ஆண்டு போன நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 19 தொகுதிகளில் களமிறங்கினாங்க. ஒரு எம்பி தொகுதியின்னு எடுத்துக்கிட்டோம்ன்னா ஆறு சட்டமன்ற தொகுதிகள். கோவை, விருதுநகர், கன்னியாகுமரி இப்படி 19 தொகுதிகள் இதை கணக்கு போட்டோம்னா கிட்டத்தட்ட 114 சட்டமன்ற தொகுதிகள் வருது. ஏறக்குறைய இன்னும் ஒரு நாலு தொகுதிதான் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம்.

எனவே இந்த 114 தொகுதிகளலையும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு எம்பி தொகுதியில் இருந்தும் குறைந்தது இரண்டு சட்டமன்ற தொகுதியையாவது பாஜக பெற வேண்டும் என தலைமை விரும்புகிறதாம். அப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 38 தொகுதிகள் வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க 38 மாவட்டங்கள் இருக்குன்னா ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொகுதியையாவது பாஜக பெற்றுவிட வேண்டும் அப்படின்னு ஒரு அஜெண்டா வச்சிருக்காங்களாம்.

மொத்தமாக கணக்கு போட்டு பார்த்தால், ஏறக்குறைய 76 தொகுதிகள் வருகிறது. போன முறை அதிமுக கூட்டணி வென்றதை விடவும் இந்த முறை பாஜக குறிவைக்கும் சீட்டுகளின் எண்ணிக்கை ஒன்று அதிகமாகவே வருகிறது. அதிமுகவிடம் தொகுதி கேட்கும் முன்பே இப்போதில் இருந்து 76 தொகுதிகளில் தீயாய் வேலை செய்ய பாஜகவினருக்கு மறைமுக உத்தரவு வந்துள்ளதாம்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி போட்ட தப்புக்கணக்கு... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அமித் ஷா...!
இதில் மேற்கு மண்டலம், தென்மண்டலம் இங்கெல்லாம் பாஜகவுக்குன்னு வலுவான தொகுதிகள் இருக்கு. அங்கெல்லாம் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றும், பாஜகவிற்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை தட்டித்தூக்க தனியாக பிளான் போட்டு வேலை செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்காங்களாம்.

இதன் பின்னர் எப்படியாவது அதிமுகவிடம் இருந்து கணிசமான தொகுதிகளைப் பெற வேண்டும் என்றும் அமித் ஷா முயற்சித்து வருகிறாராம். ஆரம்பத்தில் சரி பாதி தொகுதி வேணுன்னு ஒரு டாக்கை ஆரம்பிச்சி, மெதுவா 60யில் இருந்து 80 சீட்டுக்கு குறைவில்லாமல் தொகுதி பங்கீட்டை முடிக்க பாஜக தரப்பில் திட்டமிட்டுள்ளார்களாம்.
இதையும் படிங்க: தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!