முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. பணிகள் நிறைடைந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவு பெற்றுள்ளது.
இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிலையில் உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, எனக்கு உணர்ச்சி பூர்வமான நாள், இந்த விழாவிற்காக மட்டுமல்ல. எந்த இடத்திற்காகவும் நான் உணர்ச்சி வசப்படுகிறேன். உங்களுக்கு எல்லாம் மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த தாய் கலைஞர் கருணாநிதி.
இதையும் படிங்க: என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

இந்த பெருமை மிகு வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது. நீங்கள் எல்லாம் பாராட்டு விழா நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு நான் இருக்கிறேன். எல்லோருக்குமான ஆட்சி, உங்களை முன்னேற்றுகிற ஆட்சி.. அதனால் தான் நான் இருக்கிறேன்..

சில வகுப்பு வாத சக்திகளுக்கும்,அவர்களுக்கு துணை போகிற கொத்தடிமை கூட்டத்தாலும் தாங்கி கொள்ள முடியவில்லை.. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை,.. அதனை எல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தருவது நீங்களும் மக்களும் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. கடுமையாக சாடிய அன்புமணி.. ஏன் தெரியுமா?