கடந்த 2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பாஜக மூத்த தலைவர் பிரதாப் கடியார் என்பவர் ஜார்கண்ட் மாநிலம் சைபாசா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், ராகுல்காந்தியின் கருத்து அவதூறாகவும், பாஜக தொண்டர்களை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது. ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

இதில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, ராகுல்காந்தி தரப்பில் ஜார்கண்ட் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்கள் பிடிவாரண்டை பல மாதங்கள் நிறுத்தியும் வைத்திருந்தனர். கடந்த வருடம் மார்ச் மாதமும், ராகுல்காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. மறுபடியும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க ராகுல்காந்தியின் வழக்கறிஞர் முறையிட்டும்கூட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல்காந்தி நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுபிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுபோன்ற இன்னொரு அவதூறு வழக்கு சுல்தான்பூர் கோர்ட்டிலும் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்த கோர்ட்டில் ராகுல்காந்தி நேரில் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதுக்குத்தான் காத்திருந்தோம்.. மோடி அரசுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் பாராட்டு..!