தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தவெக முதன்முறையாக முழு அளவில் களமிறங்கியுள்ளது. மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இதில் அவர் தானே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்தன. தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடலூரில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!
நாளை கடலூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் விஜய் பிரச்சாரம் நடத்தலாம் என்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10:00 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நேற்றைய தினம் கடலூரில் விஜய் பரப்புரையை மேற்கொள்ள இருந்தார். புதுச்சேரி வாக்குப்பதிவை முன்னிட்டு விஜய் பரப்பரைக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றி விசிலுக்கே..! ஓட்டுக்கு 10 ஆயிரம்... பகல் கனவு பலிக்காது..!! ஆதவ் விளாசல்..!!