மதுரையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது பல கேள்விகளை எழுப்பியது. பொதுவாக திமுக கூட்டங்களில் துணை முதல்வர் என்பதால் உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருப்பார். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில், அவர் மேடையில் அமராமல் கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார். அதுவும் தனி லைனில் மற்ற மூத்த அமைச்சர்களுடன் இருந்தார்.

மேலும் நேற்று முழுவதும் மாஸ்க் அணிந்திருந்த உதயநிதி ஸ்டாலின், காரில் தனியாகவே பயணம் செய்தார். அவருடன் மற்ற நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: 2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். எனவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!