2026-ல் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில், கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் ரொம்ப ஆடக்கூடாது! அடக்கி பேசணும்.. எச்சரிக்கும் ஹெச்.ராஜா!
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும் - தமிழ்நாட்டின் உரிமை & வளர்ச்சிக்காகவும், இச்சிறப்புக்குரிய பொதுக்குழுவில் 27 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை செயல்படுத்திட, சிறப்பு தீர்மானத்தை நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது 30% வாக்காளர்களை 2 மாதங்களில் பூத் கமிட்டிகள் மூலம் கழக உறுப்பினர்களாக்கிட நம் முதலமைச்சர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.
கல்வியாளர் அணி - மாற்றுத்திறனாளிகள் அணி என கழகத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முடிவுகளும் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

கழகத்தின் கொள்கைகள் - திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் கழக கூட்டணியை 200க்கும் அதிகமான இடங்களில் வெல்லச் செய்ய பொதுக்குழுவில் உறுதியேற்றோம்.
2026-இல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே விடுதியில் காலை டிடிவி தினகரன் - மாலை துணை முதல்வர்.. பேனரால் எழுந்த பிரச்சனை..!