மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் தொகுதியில் நடந்த கூட்டத்தில் துணை நடிகைகளை அழைத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து அமைச்சர் சேகர் பாபு டான்ஸ் ஆடுகிறார். அவருக்கே அது வெட்கமாக இல்லையா.. என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர்,
இதையும் படிங்க: கேப்டன் மகனுக்கு பதவி... தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. எடுத்த அதிரடி முடிவு!
ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை ஓட விரட்டிய ராணுவத்தினருக்கு நான் மிகப்பெரிய சல்யூட் அடித்துக் கொள்கிறேன். 2021 தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று கூறி, திமுக ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறினார். அதையே ஸ்டாலினும் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மதுவை ஒழிப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. அதேபோன்று கனிமொழியும் பல்வேறு மதுபான ஆலைகளை நடத்தி வருகிறார். குறிப்பாக புதுக்கோட்டையிலேயே இரண்டு மதுபான ஆலைகள் அவருக்கு சொந்தமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளதாக பிரேமலதா கூறினார்.

மேலும் விவசாயிகளின் கனவாக உள்ள காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு திமுக அரசு ஒரு துளி நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் சரியான தண்டனை அளித்துள்ளது. அதேபோன்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி ஞானசேகருக்கு தண்டனை அதிக அளவு கொடுக்க வேண்டும். இதில் அவருக்கு துணை போன மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களுக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும், இன்றைக்கு போதைக்கும் கஞ்சாவிற்கும் இளைஞர்கள் அடிமையாகி கிடக்கின்றனர். இதனால்தான் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவு நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் தொகுதியான குளத்தூரில் விழா ஒன்று நடைபெற்றது. மகளிர் உரிமை தொகை அளிப்பதால் பெண்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர் என்று முதல்வர் நினைத்துக் கொண்டுள்ளார். ஆனால் பெண்கள் அனைவரும் நன்றாக இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பொதுமக்கள் அதற்குச் செல்லவில்லை இருப்பினும், அந்த விழாவில் வயதான துணை நடிகைகளை அழைத்துக் கொண்டு வந்து பொதுமக்கள் போல் உட்கார வைத்து அவர்களோடு அமைச்சர் சேகர்பாபு டான்ஸ் ஆடுகிறார், இது அமைச்சருக்கு கேவலமாக இல்லையா என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரசுக்கு கிடைக்கும் நிதியை முறையாக அரசு செலவு செய்யாமல் எவ்வளவு காலம் தான் பொதுமக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தப் போகிறீர்கள் என்று அவர் காட்டமாக பேசினார்.
இதையும் படிங்க: இதில் எனக்கு அடுத்து தான் ஸ்டாலினும்- விஜயும்... பொளந்து கட்டும் விஜய பிரபாகரன்!