தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வெளிமாவட்ட ஆலோசனை கூட்டம். முன்னாள் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி, செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், கீதா ஜீவன், முத்துசாமி, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரியகருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசுகையில், தாராபுரம் சட்டமன்ற இடைதேர்தல் என்பது இயற்கையானது அல்ல ஆளுங் கட்சியால் கொண்டுவரப்போது. குதிரை பேரத்தால் நடந்த ஒன்று. இந்த தேர்தலில் நாம் மக்களுக்கு செய்த திட்டங்களை சொல்லியும், ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். மற்ற கட்சிகளை போல் நாம் வேட்பாளர் சென்றுவிட மாட்டார். ஏனென்றால் நம் இயக்கத்தில் உள்ள அனைவரும் தளபதி தொண்டர்கள் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் நேரு: வருகின்ற 6ம் தேதி தாராபுரத்தில் நடக்கின்ற சட்டமன்ற இடை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுகவின் வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யாவை கழக தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார். இடைத்தேர்தலில் ஒரு பகுதியாக, வெளி மாவட்டத்தில் இருந்து வந்துள்ள நிர்வாகிகள் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது. மேலும் நிர்வாகிகளுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலையில் இருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
இதையும் படிங்க: ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!
தாராபுரம் இடைத்தேர்தலில் பொருத்தவரை திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டது என்றார். ஒரு வேட்பாளர் இயற்கையாக மரணம் அடைந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் அங்கு ஆளுங்கட்சி வெற்றி பெறும். ஆனால் தாராபுரம் இடைத்தேர்தல் என்பது குதிரை பேரம் மூலம் ஆளுங்கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒரு இடைதேர்தல்.
அதிமுக வில் இருந்து வெற்றி பெற்று அவர்களுக்கே துரோகம் செய்து விட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு தனது பதவியை தூக்கி காலில் போட்டு மிதிப்பதை போல் மிதித்து விட்டு ராஜினாமா செய்து, தற்போது மீண்டும் தான் ஏதோ சாதிக்க வந்தது போல் தவெகவில் இணைந்து வந்துள்ளார். இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள். கடந்த தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காமல் போய்விட்டோம் என்ற ஏக்கத்தில் இருந்தார்கள் அதனை இப்போது பூர்த்தி செய்வார்கள்.
கடந்த தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர் அவரது கட்சியை கட்டி கொடுத்து விட்டு வெளியே சென்றார். இதனால் அதிமுகவுக்கு அனுதாபம் ஏற்படாது. நல்லாட்சி கொடுத்தவங்களை வீட்டில் உட்கார வைத்து விட்டோமே என திமுக மேல் தான் அனுதாபம் ஏற்படும் எங்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் நேரு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மம்தா–கனிமொழி சந்திப்பு: 2029 லோக்சபா தேர்தலுக்கு திமுக போடும் கணக்கு? தேசிய அரசியலில் புதிய திருப்பம்!