ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் முன் ஜாமின் கிடைத்தது.

நேற்றைய தினம் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி நிபந்தனைத் தொகை செலுத்தி இருந்தார். இன்று முதல் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகினார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடந்த விசாரணை முடிவு பெற்றது.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்... ஒரு மாதம் தலைமறைவு..!! துருவித் துருவி விசாரணை.!
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விசாரணை என்ற பெயரில் மிரட்டல் நடந்ததா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இப்போது இது குறித்து எதுவும் பேச வேண்டாம். இது குறித்து விரைவில் உங்களை சந்திப்பேன் என்று கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில், மீண்டும் இன்று மாலை 5.30 மணிக்கு கையெழுத்திட வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!