கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், புதிய பேருந்து நிலையம் அருகே "தமிழ்நாடு தலைகுனியாது" பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கழக கொள்கை பரப்பு செயலாளர் பேராசிரியர்.சபாபதி மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய சபாபதி மோகன்.. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய், கட்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டங்கள், மக்களுக்கான பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டங்கள் என எதுவும் இன்றி கட்சியை துவங்கிய உடனே, தான் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறார். இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்காமல், 15 நாட்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும் விஜய், தன்னை முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறார். ஒரு நடிகர் அரசியல் கட்சி துவங்குவது தப்பில்லை, ஆனால் கட்சி துவங்குவதற்கு முன் அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்றார்.
திமுக கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல, ஆன்மீகத்துக்கு எதிரான இயக்கம் அல்ல, இந்துக்களுக்கு எதிரான இயக்கம் கிடையாது, அனைவரும் அண்ணன் தம்பியாக பழக வேண்டும் என்ற கொள்கை கொண்ட இயக்கம் என்றார். திமுக அரசின் சாதனைகள் எல்லாம் மோடி அரசின் ஓரவஞ்சனையை கடந்து வந்த சாதனைகள் என்றும், வரும் தேர்தலில் அதிமுகவோ, விஜயோ, அன்பு மணியோ எதிரி அல்ல., நம்முடைய ஒரே எதிரி பாஜக அரசு தான் என குறிப்பிட்ட சபாபதி மோகன்.. கல்விக்கான நிதி, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி, மெட்ரோ ரயில்க்கான நிதி போன்ற எந்த நிதியும் வழங்காத மோடி அரசு, தமிழ்னாட்டை ஊரவஞ்சனையுடன் நடந்துவதாக கொள்வதாக சாடினார்.
இதையும் படிங்க: “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?!
இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி... விஜய் விமர்சனத்திற்கு சேகர்பாபு பளீச் பதில்..!!