தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பெயரில் மாவட்டம் வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
இந்தநிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாசி சிவகங்கைக்கு வரும் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றார். இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி காரில் செல்லூர் ராஜூ ஏற முயன்ற போது அவரை ஏற வேண்டாம் என அவர் கூறியதாக வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோவில் செல்லூர் ராஜுவை அண்ணா..... அண்ணா....... வெளிய வாங்கண்ணா.... வேற வண்டியில் வாங்க அண்ணா.... என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் வெளிப்பாடு தான் தனது காரில் அவரை ஏற்றி செல்லவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன.
இதையும் படிங்க: ஆத்திரத்தில் இபிஎஸ் மூளை கலங்கி போயிருக்காரு! முத்தரசன் கடும் தாக்கு..!
பாஜக - அதிமுக கூட்டணி அமைத்ததில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட செல்லூர் ராஜூ பாஜகவை பற்றி பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் செல்லூர் ராஜூ விரைவில் அதிமுகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய உள்ளதாக கூட செய்திகள் வெளியாகி வந்தன. இதனால் செல்லூர் ராஜூ மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அவரை காருக்குள் ஏற்றாமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் கொடுக்கிற சர்டிபிகேட் தேவையில்ல... அமைச்சர் ரகுபதி காட்டம்!