பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (Asian Youth Games 2025) கபடி போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்த இரட்டைத் தங்க வெற்றி, இந்தியாவின் இளம் வீரர்களின் திறமையையும், அணியின் ஒற்றுமையையும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள், பஹ்ரைனின் ரிஃபா நகரில் உள்ள இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெற்றன.அங்கு இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைப் பிரதிபலித்தனர்.ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 14 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.

இளையோர் ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தமிழக வீராங்கனை கார்த்திகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆடவர் விளையாட்டு பிரிவில் அபினேஷ் மோகன் தாஸ் என்பவர் இந்திய அணியில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளார். விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் தமிழக அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை... முதல்வர் ஸ்டாலின் கௌரவிப்பு..!
தங்கம் வென்ற வீராங்கனை கார்த்திகாவை அழைத்து பாராட்டினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் கார்த்திகாவை அழைத்து பாராட்டி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எங்களை வாழ்த்தினார் என்றும் ஊக்கப்படுத்தினார் எனவும் கார்த்திகா கூறினார்.கண்ணகி நகரை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிவித்தார். வசதிகள் நிறைந்த அரங்கம் கட்டி தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கபடிப் போட்டியில் தங்கம்..! தாயகம் திரும்பிய கார்த்திகாவுக்கும், அபினேஷுக்கும் உற்சாக வரவேற்பு...!