திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன். 58 வயதான குணசேகரன், அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த இவர், 2011 முதல் 16 வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராகவும் பதவி வகித்தார்.

மேலும், 2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார் குணசேகரன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தேர்தலுக்கு முன்பே ஓட்டு வேட்டை ... புது டெக்னிக்கை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

குணசேகரன் மறைவை தொடர்ந்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.பி.வேலுமனி, முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், குணசேகரனின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக கொடுத்துள்ளனர். இதன்மூலம் இந்த மண்ணை விட்டு குணசேகரன் மறைந்தாலும் வாழத்தான் போகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கண்கள் தானம் என்பது இருள் சூழ்ந்த ஒருவரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்பதற்கு சமம் தானே...

இதையும் படிங்க: அதிமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாது... திருமாவளவன் திட்டவட்டம்!!