தைலாபுரம் தோட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கச் சென்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் பாகமவை விட்டு விலகுவதாக கூறுகிறார்கள். எனது சட்டமன்ற நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ராமதாஸ், அன்புமணி சந்தித்துவிட்டால் பிரச்சனைகள் சரியாகிவிடும், அவர்கள் இருவரும் சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை எனக்கூறினார்.

சமூக ஊடகங்கள், ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான செய்தி பரப்புகிறார்கள். பாமகவில் விரிசல் ஏற்பட நான் தான் காரணம் என பொய்யான செய்தி பரவுவதைப் பார்த்து கண்ணீர் வடித்தேன். அன்புமணியை நேரில் சந்திக்க முயற்சித்து வருகிறேன். நேற்று மட்டும் தான் அவருடன் போனில் பேசவில்லை என்றார்.

பாமகவில் இருந்து திலகபாமாவை நான் நீக்கச் சொன்னேன் எனக்கூறுகிறார்கள். பாமக பொறுப்புகளில் இருந்து ஒருவரைக்கூட நீக்கக்கூடாது என ராமதாஸிடம் மன்றாடினார். ஆனால் அவர் தனது மன உளைச்சலையும், வேதனைகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். உங்களுக்கும், கட்சியினருக்கும், குடும்பத்திற்கும் தெரியாமல் எங்காவது போய்விட வேண்டும் என நினைக்கிறேன் என ராமதாஸிடம் எனது மன வேதனைகளை கொட்டித்தீர்த்தேன். உயிருடன் இருக்கக்கூடாது என்றே நினைக்கிறேன் என உணர்ச்சி பொங்க பேசியது பாமக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: அன்புமணி VS ராமதாஸ்.. பாமகவில் நெருக்கடி! மன உளைச்சலில் ஜி.கே மணி..!
இதையும் படிங்க: நான் துரோகம் செய்ய மாட்டேன்! சீக்கிரமே ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு... ஜி.கே. மணி உறுதி..!