பாஜக மாநில முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதை போல அருணாச்சலம் படத்தின் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் வரிகளை குறிப்பிட்டு போஸ்டர்களால் பரபரப்பு.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நடந்து முடிந்த தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் விரைவில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை டெல்லியில் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணாமலை சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!
அவர் தேசிய தலைவருடன் என்ன பேசினார் என்பது தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டு, தனது கருத்துகளை கடிதமாக நிதின் நபினிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நிதின் நபினை மட்டுமின்றி, பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷையும் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அரசியல் ரீதியாக பி.எல். சந்தோஷ் தான் அண்ணாமலையின் வழிகாட்டியாக கருதப்படுவதால், அவரிடமும் தனது மனக்குமுறல்களை அண்ணாமலை பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தலைவருடன் நடைபெற்ற சந்திப்பில், ‘தான் பாஜகவிலிருந்து விலக விரும்புகிறேன். ஆனால் அது எந்தவிதமான மனக்கசப்பும் இல்லாமல், சுமுகமான முறையில் இருக்க வேண்டும்’ என்ற தனது எண்ணத்தை அண்ணாமலை தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஆலோசனை நடத்திய பின்னர், அண்ணாமலையின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜகவை வளர்த்ததில் அண்ணாமலைக்கு பெரும் பங்கு உண்டு. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பாஜகவை கொண்டு சேர்க்க கடுமையாக உழைத்தார் என்றே சொல்ல வேண்டும். அப்படியிருக்கையில் அண்ணாமலை தனிக்கட்சித் தொடங்கினால் இளைஞர்களின் ஆதரவு கிடைக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த பாஜக நிர்வாகி விஷ்னு பிரசாத் என்பவர் அண்ணாமலையின் பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர் பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டர்களில், அண்ணாமலை ரஜினிகாந்திடம் விழ்த்து பெறுவதை போல சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்லகாலம் பொறந்துருச்சு நேரம் கனிஞ்சுருச்சு என அருணாச்சலம் படத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவது போல போஸ்டர் ஒட்டி உள்ளார்.
இதையும் படிங்க: ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!