ஒவ்வொரு மசோதாக்கள் மீதும் தனித்தனியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. தொகுதி மறு வரையறையோடு கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 207 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தொகுதி மறு வரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவறையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்புகளை மீறி இரண்டு மசோதாக்களை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவைகள் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

மசோதாவை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதத்தை முன் வைத்தனர். மசோதாவை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, மசோதா கலை மக்களவையில் அறிமுகப்படுத்துவதற்கான வாக்கெடுப்பு நடந்தது.
இதையும் படிங்க: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..! மக்களவையில் 207 எம்.பி.க்கள் ஆதரவு..!!
குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே மூன்று மசோதாக்களை ஒன்றாக தாக்கல் செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் ஒவ்வொரு மசோதா மீதும் தனித்தனியாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் நாளை மாலை 4 மணியளவில் தொகுதி மறு வரையறை மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்க தலைவர் கருப்பு கொடியேற்றினால் என்ன..? நீலக்கொடி ஏற்றினால் என்ன..? மக்களவை சபாநாயகர் கிண்டல்..!!