கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார். தேர்தலுக்கு பிறகு வேலுமணி சிவி சண்முகம் ஆதரவாளராக இவர் இருந்து வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்து புதிய மாவட்ட செயலாளரை நியமித்தார். அப்போது கடலூர் அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது.
காவல் துறை தலையிட்டு விசாரணையை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். அதிமுக அலுவலகம் பிரச்சனை தொடர்பாக கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உரிய ஆவணங்களுடன் வருகின்ற நேற்று நேரில் ஆஜராக கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் உத்தரவிட்டுருந்தார் . நேற்று அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பேச்சு வார்த்தை நடைபெற இருந்த நிலையில் அதிமுக முன்னாள் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத்தின் தரப்பினர் இன்று பேச்சுவார்த்தைககு முன்னதாகவே அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியை மாவட்ட செயலாளர் எம்.சி. தாமோதரனிடம் ஒப்படைத்தார்.
கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியைப் பெற்று கொண்டு , மாவட்டச் செயலாளர் தலைமையில் தொண்டர்கள் அலுவலகத்திற்குச் சென்று உற்சாகமாக கதவை திறந்தனர். கதவைத் திறந்து பார்த்தபோது அலுவலகம் முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனைக் கண்டு மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபோது மின்விசிறி , கம்ப்யூட்டர் , பால் சீலிங் , மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அகற்றப்பட்டு காலி கூடாரமாக அதிமுக கட்சி அலுவலகம் இருந்தது.
இதையும் படிங்க: இபிஎஸ் உடன் சண்டையா? சமாதானமா?... இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி முடிவு...!

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடலூர் மாநகர செயலாளர் சி கே எஸ் கார்த்திகேயன் கடுமையான சொற்களால் முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி .சம்பத் அரசியல் நாகரிகமற்ற செயலை செய்துள்ளார். அவர் எந்த அரசியல் பயணம் மேற்கொண்டாலும் , அவர் செய்த செயல் அரசியல் நாகரீகம் அற்ற செயலாகும் , விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அலுவலகத்தை ஒப்படைத்த நபர்கள் எந்தவிதமான பொருள்களையும் சேதப்படுத்த வில்லை , அலுவலகம் எப்படி இருந்ததோ அப்படியே ஒப்படைத்துச் சென்று விட்டனர். ஆனால் கடலூர் அதிமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்டு சாவி ஒப்படைத்து உள்ளார்கள் என்று குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் சி சம்பத்தின் ஆதரவாளர்கள் கடலூர் முதுநகர் பகுதி செயலாளர் கந்தன் தலைமையில் கூட்டம் நடத்தினர். அப்போது கடலூர் அதிமுக மாநகர செயலாளர் சி.கே.எஸ் கார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த அலுவலகம் பிரச்சனை ஆரம்பித்தபோது சாவியை நாங்கள் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டோம் பூட்டி இருந்த அலுவலகத்தை நாங்கள் சூறையாட முடியும் சேத படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!