சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். அதிமுக உறுப்பினர்கள், அன்புமணி தலைமையிலான பாமக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இந்தப் பதிலுரையை புறக்கணித்தனர். திமுக தலைமையிலான 5 ஆண்டு ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால் பல எம்.எல்.ஏ.க்களும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதற்கிடையே, நண்பர்களான அன்பில் மகேஷும், உதயநிதியுன் பேரவைக்குள் சத்தமே இல்லாமல் ஒரு காரியத்தை செய்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் ‘ஃபேர்வெல்’ நிகழ்ச்சிகளில் வழக்கமாக பின்புற இருக்கைகளில் அமர்ந்து இருப்பவர்கள் கூட முன்னிலைக்கு வந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். அதுபோலவே, இன்று சட்டமன்றத்தில் நடந்த ஒரு நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று, அவை முன்னவர் இருக்கையில் அமர்ந்தது கவனத்தை ஈர்த்தது.
சீனியாரிட்டி அடிப்படையில் சட்டசபையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் முன் வரிசையில் அமர்ந்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பங்கேற்காத நிலையில், அவர் இருக்கையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அமர்ந்திருந்தார். அவை முன்னவர் எனும் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அடுத்த இருக்கை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் காலியாக இருந்த அந்த இருக்கையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
இந்த நிகழ்வு சாதாரண இருக்கை மாற்றமா, அல்லது ஏதேனும் அரசியல் குறியீடா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிலர், அவை முன்னவர் இல்லாத காரணத்தால் தான் அந்த இருக்கையில் அமர்ந்ததாக கூறுகின்றனர் அதேசமயம், “மூத்த தலைமுறை சிறிது இடம் கொடுத்தால் இளம் தலைமுறை முன்னிலைக்கு வரும்” என்ற கருத்தை முன்பு உதயநிதி தெரிவித்திருந்தது நினைவுகூரப்படுகிறது. இதனாலேயே இளம் தலைமுறைக்கு வாய்ப்பு வழங்கும் ஒரு அறிகுறியாக இந்த இருக்கை மாற்றம் நடந்திருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது.
எனினும், இது வெறும் நடைமுறை மாற்றமா அல்லது அரசியல் செய்தியை வெளிப்படுத்தும் நிகழ்வா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்! ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!