மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான பாஜகவினர் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, அவரின் மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை பேசியது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

அவர் பேசுகையில், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லாததால், இந்து வாக்குகளை அரசியல்வாதிகள் பெற்று கொண்டு, மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு செல்லக் கூடிய குழந்தைகள் கூட நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

ஆளும் ஆட்சியாளர்களுக்கு முருகன் மாநாடு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோயில் வழிபாடுகளில் தலையிட்டால் ஒவ்வொரு வீடுகளிலும் சூரசம்காரம் செய்துவிடுவோம் என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளத்தில் சமத்துவ சிந்தனையையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் சுமந்து செல்ல வேண்டும். அதுவே அறிவின் அடையாளம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழ் சமூகத்தின் சிறந்த அடையாளத்தை தவிர வேறு எந்த சாதி, மத அடையாளங்களும் மாணவர்களுக்கு தேவையில்லை. மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது ஆரோக்கியமான, நல்ல அணுகுமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேல் எடுத்து சுற்றி வந்தும் வெல்ல முடியவில்லை... பாஜகவை விளாசிய அமைச்சர் சேகர்பாபு!!