2023ம் ஆண்டு திமுக அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட 70 ஜோடிகளுக்கான இலவச திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது, துர்காவிற்கு நினைவு பரிசாக பெரிய கடிகாரத்தை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு, தொடர்ந்து பட்டுச்சேலையும் பரிசளித்ததாக தெரிகிறது. அப்போது திடீரென துர்காவின் காலில் விழுந்து ஆசிப்பெற்ற சேகர்பாபுவின் செயலால் அங்கிருந்தவர்கள் சில நொடிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: திருப்பதி போல் தமிழக கோயில்களில் வருகிறது அதிரடி மாற்றம் - பக்தர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு கொடுத்த குட்நியூஸ்...!

அதிமுகவின் அப்போதைய பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியதற்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும் இன்று வரை திமுகவினர் அடிமைகள் என்றும், காலில் விழுந்து பதவிக்கு வந்தவர்கள் என்றும் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, திமுகவின் சீனியர் அமைச்சர் ஒருவர் இப்படி முதலமைச்சரின் மனைவி காலில் விழுந்தது மக்களை மட்டுமல்ல, திமுகவினரையும் முகம் சுளிக்க வைத்தது.

தற்போது, காலில் விழக்கூடாது என சுயமரியாதை கற்பிக்கும் திராவிட மாடல் அரசின் துணை முதலமைச்சர் காலை அமைச்சர் சேகர் பாபு தொட்டு வணங்கியிருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றிணை முடித்துக்கொண்டு புறப்பட தயாரான சேகர் பாபு, சூரியவம்சம் தேவயாணி போல யாருக்கும் தெரியாமல் நைசாக உதயநிதியின் காலைத் தொட்டு தனது மார்பில் வைத்து வணங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
இதோ அந்த வீடியோ....
அன்னைக்கு துர்காம்மா காரில் ஏறியதும் கதைவை மூடுவதுபோல காலை தொட்டு கும்பிட்டாரு...
அதைக்கூட ஏத்துக்கலாம்...
இப்போ இதை பாருங்க... ச்சைக் என்ன மனுசன் இவரு👇👇 pic.twitter.com/8SMgyCNr5D
— KNR Sivaraj (@knrsivaraj80) June 28, 2025
இதையும் படிங்க: ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!