தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வழியாக தலைவர்கள் அனைவரும் சுற்றுலா மோடுக்கு மாறிவிட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலில் ரெஸ்ட் எடுக்கவுள்ளார். இந்த கொடைக்கானல் விசிட்டிற்கு பின்னால் மிகப்பெரிய மர்மம் மறைந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கொடநாடு எப்படி சென்டிமெண்ட்டான இடமோ, அதேபோல் ஸ்டாலினுக்கு கொடைக்கானல் சென்டிமெண்ட் இடமாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு இதே மாதிரி தான் ஸ்டாலினும் குடும்பத்துடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றார். அந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று சி.எம்.மும் ஆனார். அதே சென்டிமெண்ட் இந்த முறையும் வொர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காகவே கொடைக்கானலுக்கு சென்றுள்ளார் எனக்கூறப்படுகிறது.
கொடைக்கானலில் 4 நாட்கள் ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வெடுக்கப்போகிறார் எனக்கூறினாலும், உண்மையில் அங்கே தான் தமிழக அரசியலையே தலைகீழாக புரட்டிப்போடப்போகிற சம்பவம் அரங்கேறவுள்ளது. தமிழக அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில் 32 பேர் இந்த முறை தேர்தலில் களம் கண்டுள்ளனர். இந்த முறையும் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கொடைக்கானலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த அமைச்சரவைக்கான பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளாராம்.
தேர்தலில் போட்டியிட்ட எந்தெந்த அமைச்சர்கள் வெற்றி பெறுவார்கள், யாருக்கு அதிக பெரும்பான்மை கிடைக்கும், யாருக்கெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது போன்ற சில முக்கியமான டேட்டாக்களை சேகரிக்க முதலமைச்சர் ஸ்டாலின், தனது மருமகன் சபரீசனுக்கு உத்தரவிட்டுள்ளாராம். அதனை அடிப்படையாக கொண்டு சில அமைச்சர்களை மாற்ற திட்டமிட்டுள்ள ஸ்டாலின், இந்த முறை இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அறிவாலய அமைச்சர்கள் வட்டாரம் யார் தலை உருளப்போகிறதோ? என்ற பீதியுடன் இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!
இதையும் படிங்க: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு..! மதுரை ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலின் பளிச் பதில்..!