கலைஞர் கருணாநிதி குறித்து இபிஎஸ் தொடர்ந்து பிரசார மேடைகளை பேசுவது குறித்து சுட்டிக்காட்டி முதலமைச்சர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறிப்பாக ஆங்கில நாளேடிற்கு அளித்த பேட்டியில், கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறு பேசினால் திமுக தொண்டனாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், கலைஞர் கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்ல தலைவர் எனவும் முதலமைச்சர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுபோன்று தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கலைஞர் கருணாநிதி குறித்து கருத்து தெரிவித்த நிலையில் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தி இந்து ஆங்கில நாளேடிற்கு முதலமைச்சர் அளித்த பேட்டியில் தோல்வி பயத்தால் இபிஎஸ் அவதூறு பரப்பிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். அதே போன்று எடப்பாடி பழனிசாமி தேர்தலில் தோல்வி வரும் என்பதை தெரிந்து பொறுப்பற்ற முறையில் பேசுகிறார் என சாடியுள்ளார். கலைஞர் கருணாநிதி குறித்து பேசும் இபிஎஸுக்கு நாவடக்கம் தேவை என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று கலைஞர் கருணாநிதியின் கடைசி கால சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் முன்பு வைக்கப்பட்டன எனவும், ஆனால் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை குறித்து நாங்கள் பேசுவதில்லை எனவும் முதலமைச்சர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அரசியல் நாகரிகம் கருதியே எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் குறித்து நாங்கள் பேசுவதில்லை எனவும் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசினால் அமைதியாக இருக்க முடியாது எனவும் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , கலைஞர் கருணாநிதி, காமராஜருக்கு நினைவிடம் அமைக்க இடம் தரவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக இந்து நாளேட்டிற்கு முதலமைச்சர் பேட்டியளித்து எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!
இதையும் படிங்க: அரசு கஜானாவை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் திமுக... பணம் எங்க போச்சு முதல்வரே..? பியூஷ் கோயல் சரமாரி கேள்வி..!!