இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.
108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏ காமராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவு அளித்தார். நேற்றே ஆதரவு கொடுத்தேன் என்றும், இன்றும் கொடுப்பேன், நாளையும் ஆதரவு கொடுப்பேன் ஐந்து ஆண்டு காலமும் கொடுப்பேன் என்று தெரிவித்தார். அவதார முதல்வர் நமது முதலமைச்சர் விஜய் என்றும் தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் முதல்வர் தன்னையும் காப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திக்.. திக்.. நிமிடங்கள்..! தவெக அரசுக்கு காங்., CPM, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..! வன்னியரசு கருத்து..!
முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு நாட்கள் தான் ஆகிறது என்றும் அதற்குள் திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சரணடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். முதல்வர் விஜய் ஆட்சி அமைந்த பிறகு கடத்தல் காரர்கள், கஞ்சா வெற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். எம்எல்ஏ காமராஜ் பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்த நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வராக தொடர்வாரா விஜய்..? தொடங்கியது நம்பிக்கை வாக்கெடுப்பு..!