கன்னடம் தமிழில் இருந்து பிறக்கவில்லை. அது தனித்து இயங்க கூடியது என்று கன்னட அமைப்பினர், கர்நாடகா அரசியல்வாதிகள் கூறினர். மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கோரவில்லை. இதனால் தக்லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெரிவித்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனால் வரும் 5ம் தேதி கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனிடையே கன்னட மொழி விவகாரத்தில் கமல் பேசியது தேவையற்றது, கடிதம் எழுதுவதற்கு பதில் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த சார் யார்? அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்.. சந்தேகம் எழுப்பிய தமிழிசை..!

இது தொடர்பாக அவர் பேசுகையில், "நமது தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள். அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிவிட்டு, நீண்ட கடிதம் எழுதுவதற்கு பதிலாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்கு இதில் என்ன ஈகோ? அதற்கு பதிலாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழிசைக்கு மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழின் மானத்திற்காக தன்மானம் மிக்க தமிழன் தனியாக போராடும்போது, பெயரிலேயே தமிழை வைத்திருப்பவரும், தமிழறிஞரின் மகளுமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழனை மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா? உலகறிந்த உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? என அருணாச்சலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கு; பெண்கள் வணங்கி போற்றத்தக்கவர்கள்... பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்!!