இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகளில் கூடிய ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத் திருநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார்.

அறிவு இறைவனின் உறைவிடத்தைத் தேடுகிறது, அன்பு இறைவனின் உறைவிடமாகிறது, இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம்!பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்
இதையும் படிங்க: நீதிபதி என்ன வரலாற்று வல்லுனரா? கமல் மன்னிப்பு கேட்க கூடாது! சீமான் கறார்..!

என்ற இறைதூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருவிழாவினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இவ்வாறு சீமான் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜாவை இறைவன் என்று புகழ்ந்த சீமான்... இசை போதிமரம் என புகழாரம்!